தீபாவளி - நெல்லை மாவட்டத்தில் மது விற்பனை ரூ.3.48 கோடி
நெல்லை: தீபாவளியையொட்டி நெல்லை மாவட்டத்தில் நடந்த மது விற்பனை மூலம் ரூ. 3.48 கோடிக்கு வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த 17ம் தேதி தீபாவளியை ஓட்டி மாநிலம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேல் கூடுதல் மதுபெட்டிகள் கடைகளுக்கு வினியோகிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக தீபாவளியன்று அனைத்து மது கடைகளிலும் 3 முதல் 5 மடங்கு கூடுதலாக மதுபானங்கள் விற்பனையானது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் 3.84 கோடியும், நெல்லை மாவட்டத்தில 3.48 கோடியும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2.43 கோடியும், விருதுநகர் மாவட்டத்தில் 2.39 கோடியும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2.18 கோடியும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2.12 கோடியும், சிவகங்கை மாவட்டத்தில் 1.82 கோடியும், தேனி மாவட்டத்தில் 1.63 கோடியும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.29 கோடியும், என ரூ.21.22 கோடியில் விற்பனை நடந்துள்ளது.
மதுரை மண்டலத்தில் உள்ள 1650 கடைகளில 16ம் தேதி 15.57 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓட்டு மொத்தத்தில் சாதாரண காலங்களை விட தீபாவளி விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 222 கடைகளில் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை ரூ.7.43 கோடியில் மது விற்பனை நடந்துள்ளது.
சியர்ஸ்...!












Click it and Unblock the Notifications