இந்தியாவை தாக்கினால் .. தலிபான்களுக்கு நக்ஸல்கள் எச்சரிக்கை

இதுகுறித்து மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கோடீஸ்வரரா ராவ் என்கிற கிஷன்ஜி கூறுகையில், தலிபான்கள் இந்தியாவைத் தாக்கினால், நிச்சயம் நாங்கள் இந்திய மக்களுக்குத் துணையாக நிற்போம். தலிபான்களுக்கு எதிரான போரில் நாங்கள் அணி திரளுவோம்.
உலகில் உள்ள 36 இடதுசாரி போராளி அமைப்புகளுடன் எங்களுக்கு நல்ல தொடர்புகள் உள்ளன என்றார் ராவ்.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் நக்சலைட்டுகள் தாக்குதலில் இந்தியாவில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தங்கள் மீது படிந்துள்ள தீவிரவாதிகள் என்ற முத்திரையைத் துடைக்க மாவோயிஸ்டுகள் மும்முரமாக இருப்பதாக தெரிகிறது.
இதற்காக தீவிரவாத செயல்ளில் ஈடுபட்டு வரும் அமைப்புகளுடன் தங்களுக்கு உள்ள தொடர்புகளை துண்டித்துக் கொள்ளவும் அவர்கள் முனைந்துள்ளனர்.
சமீபத்தில், ஒரு இதழுக்கு மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவரான கணபதி அளித்த பேட்டியில், எங்களைத் தீவிரவாத அமைப்பு என்று கூறக் கூடாது. தீவிரவாத அமைப்புகளுடன் எங்களைத் தொடர்பு படுத்தக் கூடாது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தலிபான்கள் இந்தியாவைத் தாக்கினால் இந்திய மக்களுடன் இணைந்து அவர்களை எதிர்த்துப் போராடுவோம் என்று மாவோயிஸ்டுகள் கூறியிருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications