Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜபக்சே தங்கை கணவர் திருச்செந்தூரில் சஷ்டி விரதம்

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தங்கை கணவர் திருச்செந்தூரில் சஷ்டி விரதம் மேற்கொண்டுள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் கடந்த 18ம் தேதி சஷ்டி விழா துவங்கியது. ஆண்டுதோறும் சிங்கபூர், மலேசியா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு வாழ் தமிழர்கள் கலந்து கொண்டு விரதம் இருப்பதோடு தினமும் அன்னதானமும் வழங்கி வருகின்றனர்.

இந்த ஆண்டும் வெளிநாட்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரி கணவரான திருகுமரன் நடேசன் கடந்த 22 ஆண்டுகளாக திருச்செந்தூர் சஷ்டி விழாவில் கலந்து கொண்டு விரதம் இருந்து வருகிறார்.

23வது ஆண்டாக கடந்த 17ம் தேதி திருச்செந்தூர் வந்த அவர் இங்குள்ள தனியார் விடுதியில் விரதம் இருந்து வருகிறார். அவருக்கு ரகசிய பிரிவு போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

நாளை திருகுமரன் நடேசன் பாபநாசம் சிவன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+