For Daily Alerts
Just In
பர்னாலாவுடன் இலங்கை துணை தூதர் சந்திப்பு
சென்னை: தமிழக ஆளுநர் பர்னாலாவை, இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி சந்தித்துப் பேசினார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் மேம்பட வேண்டும் என்ற நோக்கோடு, கவர்னர் பர்னாலாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன்.
உறவுகள் மேம்பட தொடர்ந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்தேன் என்றார்.
வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இதுவரை முதல்வர் கருணாநிதியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை sri lanka meeting சந்திப்பு surjit singh barnala governor பர்னாலா ஆளுநர் law college துணைத் தூதர்
Story first published: Tuesday, October 20, 2009, 9:20 [IST]