2 மாவட்டங்களில் 24 கோயில்களில் கொள்ளை - 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் நடந்த 24 கொள்ளை சமபவங்களில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான சிலைகள் மீட்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் கதவுகளை உடைத்து சிலைகள், நகைகள் ஆகியவற்றை கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றது. தொடர்ச்சியாக நடந்த இந்த சம்பவங்களில் துப்பு கிடைக்கவில்லை.
இது தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கோயில் கொள்ளை கும்பலை சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கனகவேல், சூலையன்கரிசலை சேர்ந்த காளிமுத்து, அத்திமரபட்டியை சேர்ந்த செல்வகுமார், முத்தையாபுரத்தை சேர்ந்த சுரேஷ் ஆகியோரை கைது செயதனர்.












Click it and Unblock the Notifications