நான்கே நாட்களில் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை - திமுக போஸ்டர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நான்கே நாட்களில் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்த கலைஞர் வாழ்க என்று கூறி சென்னை நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் சென்னை நகரின் பல பகுதிகளிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், இலங்கைத் தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலைப் பெற்றுத் தந்த கலைஞருக்குப் பாராட்டு, வாழ்க தலைவர் கலைஞர் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
சமீபத்தில் இலங்கை சென்றிருந்த திமுக தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் மறுகுடியேற்றம் செய்ய வேண்டும் என ராஜபக்சேவிடம் வலியுறுத்தினர்.
இதையடுத்து அடுத்த 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் பேர் மறு குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்று தெரிவித்திருந்தார். இதைத்தான் விடுதலை என்று குறிப்பிட்டு திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளதாக தெரிகிறது.













Click it and Unblock the Notifications