எனது மாமாவை காதலிக்கவில்லை - அவர்தான் ஒரு தலையாக காதலித்தார்: கத்திக் குத்துப்பட்ட மாணவி
சென்னை: எனது மாமாவை நான் காதலிக்கவில்லை. அவர்தான் என்னை ஒரு தலையாக காதலித்து வந்தார். செல்போன் மூலம் மிரட்டினார். இப்போது எனது வாழ்க்கையை பாழ்படுத்தி விட்டார் என்று கூறியுள்ளார் வேலூர் வாலிபரால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த மருத்துவக் கல்லூரி மாணவி மதியரசி.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு படித்து வருபவர் மதியரசி. 2 நாட்களுக்கு முன்பு இவரை கல்லூரி வளாகத்திற்கு அருகில் வைத்து கலைவேந்தன் என்பவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். அதைத் தடுக்க முயன்ற மதியரசியின் தோழி ராணிக்கும் கத்திக் குத்து விழுந்தது.
போலீஸார் கலைவேந்தனை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். காயமடைந்த ராணி குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆனார். மதியரசியின் வலது கை கட்டை விரல் கத்திக் குத்தில் துண்டிக்கப்பட்டு விட்டது. தற்போது அதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சேர்த்து விட்டனர்.
இந்த நிலையில் போலீஸாருக்கு மதியரசி அளித்துள்ள வாக்குமூலத்தில்,
என்னை கத்தியால் குத்திய கலைவேந்தன் எனக்கு தூரத்து உறவினர் ஆவார். அவரை இளம் வயதில் இருந்து காதலித்ததாக சொல்லியிருப்பது தவறானது. நான், அவரை காதலிக்கவே இல்லை. 6 மாதத்துக்கு முன்புதான் உறவினர் ஒருவர் இறந்த துக்க சம்பவத்தில் அவரை சந்தித்தேன்.
அப்போதுதான் அவர் தூரத்து உறவினர் என்று தெரிய வந்தது. அந்த சந்திப்புக்கு பிறகு அவரது பெற்றோர்தான் என்னை அவருக்கு பெண் கேட்டனர். எனது பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. என்னை நன்றாக படிக்க வைக்கப் போகிறோம் என்றும், திருமணம் இப்போது நடத்தவில்லை என்றும் எனது பெற்றோர் கூறிவிட்டனர்.
ஆனால் கலைவேந்தன் செல்போனில் பேசி எனக்கு அடிக்கடி தொல்லை கொடுத்தார். அவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். சென்னையில் 2 முறைதான் அவர் என்னை சந்தித்துள்ளார். அப்போதே உங்களை திருமணம் செய்ய முடியாது என்று நான் கூறிவிட்டேன். அவரை நான் காதலிக்கவே இல்லை.
கத்தியால் குத்தியபோது கூட முதலில் நான் அவரை கவனிக்கவில்லை. திடீரென்று வந்து என்னை தாக்கி விட்டார். அவரை முன்கூட்டியே பார்த்திருந்தால் இந்த சம்பவம் நடக்காமல் நான் தவிர்த்து இருப்பேன் என்றாராம்.
அதேபோல, மதியரசியின் பெற்றோரும் மதியரசி, கலைவேந்தனை காதலிக்கவில்லை என்றும், கலைவேந்தனுக்கு மதியரசியை திருமணம் செய்து தருவதாக வாக்குறுதி எதையும் தரவில்லை என்றும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications