கேரளாவால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து-வைகோ
கோவை: கேரள அரசின் நடவடிக்கையால், இந்திய ஒருமைப்பாடு பாதிக்கும் அபாயம் உள்ளது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
கோவை அன்னூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கும் போது, நம் எதிர்ப்பை மீறி மற்றொரு புதிய அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையால், இந்திய ஒருமைப்பாடு பாதிக்கும்.
பெரியார் அணை உடைந்தால் 40 லட்சம் பேர் பலியாவார்கள் என்று கேரள முதல்வர் சொல்வது பச்சைப் பொய்யாகும் . புதிய அணை கட்ட ஆய்வு செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கியது பச்சைத் துரோகம்.
காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்னைகளில் மத்திய அரசு தமிழர்களுக்கு விரோதமாக செயல்படுகிறது.
தற்போதைய மத்திய அரசு, இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் அரசுசாக செயல்படுகிறது என்றார்.
மதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் நீக்கம்:
இந் நிலையில் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வேலூர் மேற்கு மாவட்டம் ஜோலார்பேட்டை கே.சி.அழகிரி கட்சியின் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருவதால், அவர் வகித்துவரும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பொருப்பு உள்பட அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.