தேமுதிக மூத்த தலைவர் ஆஸ்டின் திடீர் நீக்கம்
சென்னை: தேமுதிகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான எஸ்.ஆஸ்டின் திடீரென கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வந்த துணை செயலாளர் எஸ். ஆஸ்டின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து மட்டும் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக முருகன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவராக சண்முக நாதன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
தே.மு.தி.க. நிர்வாகிகளான நெல்லை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் அரவிந்தன், வேலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நித்தியா, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் துரைராஜ், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் லூயிஸ்ராஜ், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் ராமர் ஆகியோரும் அவரவர் வகித்த பொறுப்புகளில் இருந்து விடு விக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கட்சியின் துணைச் செயலாளர் பொறுப்பில் ஆஸ்டின் தொடர்ந்து செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றவர் ஆஸ்டின் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications