5 ஆண்டுகள்..சாதி சான்றிதழுக்காக அலையும் மக்கள்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் தாய், தந்தைக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் இருந்தும் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்காமல் 5 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படுவதாக காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சங்கரன்கோவில் பாரதியார் நகர், தாமஸ்நகர் போன்ற பகுதிகளில் காட்டு நாயக்கன் சமுதாயத்தினர் சுமார் 150 குடுமபங்கள் வசித்து வருகின்றனர். இந்த சமுதாயத்தை சேர்ந்த பரமசிவன், சுந்தரலெட்சுமி, நாராயணன், ஐயாச்சாமி ஆகிய 4 பேரும் இந்து காட்டுநாயக்கன் பழங்குடியின சாதிசான்று கேட்டு நெல்லை கோட்டாட்சி தலைவரிடம் மனு செய்திருந்தனர். ஆனால் 5 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரையில் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை.
கடந்த 20-7-2009 அன்று சாதி சான்று வழங்கப்படும் என கூறப்பட்டதால் அன்று நெல்லை கோட்டாட்சி தலைவர் அலுவலகத்திற்கு இவர்கள் சென்றனர். ஆனால் இவர்களை தவிர மற்ற பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு மட்டும் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications