தீவிரவாத வேட்டை-எப்.பி.ஐக்கு ஒபாமா புகழாரம்
நியூயார்க் நகருக்கு வந்த ஒபாமா அங்குள்ள சிட்டி சென்டருக்கு விஜயம் செய்தார். அங்குள்ள ஊழியர்களிடையே அவர் பேசுகையில், நீதித்துறை, எப்பிஐ அதிகாரிகள் அடங்கிய அதிரடிப் படையினரின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியவை.
இவர்களின் தியாகம் மற்றும் முயற்சிகளால்தான் இன்று தீவிரவாத அச்சுறுத்தலைத் தாண்டி அமெரிக்கா தொடர்ந்து வெற்றி நடை போட முடிகிறது. தீவிரவாதிகளின் கட்டமைப்புகளை தகர்க்க முடிகிறது.
குறிப்பாக நியூயார்க் எப்பிஐ அலுவலகத்தின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியவை. அவர்களின் துரிதமான நடவடிக்கையால், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி அமெரிக்கர்களைக் கொல்ல நஜிபுல்லா ஜாஸி திட்டமிட்டிருந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது என்றார் ஒபாமா.
நியூயார்க் நகரைத் தாக்க ஜாஸி தலைமையிலான குழுவினர் திட்டமிட்டிருந்ததாக எப்பிஐ கூறுகிறது. ஜாஸி தவிர மேலும் 3 பேரை அது தேடி வருகிறது. இந்த மூன்று பேரும் ரசாயாணப் பொருட்களை கடத்தி வந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அகமது அப்சாலி என்ற இமாம் ஒருவரை எப்பிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
ஒபாமா நியூயார்க்குக்கு வரும்போது தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிரு்நதனராம்.