தப்பி ஓடிய கைதி..விரட்டி பிடித்த போலீஸ்
நெல்லை: நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.
நெல்லை பேட்டை மைலப்பபுரத்தை சேர்ந்தவர் மணி. இவர் மீது பாளை பெருமாள்புரம் போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் பாளை போலீசார் கடந்த வாரம் மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மணி ஜாமீன் கேட்டு மனு செய்தார். மனுவை விசாரித்து காலை மற்றும் மாலையி்ல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தார். கடந்த இரு நாட்களாக நீதிமன்றத்திற்கு கையெழுத்திட அவர் வரவில்லை. இதனால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில் பாளை போலீசார் அவரை கைது செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மாஜிஸ்திரேட் ராஜேந்திர கண்ணன் அவரை 15 சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை கேட்டதும் மணி நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடினார்.
ஆனால் போலீசார் அவரை ரோட்டில் விரட்டி பிடித்து, 'நன்கு கவனித்து' சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications