திருவண்ணாமலை கோவிலில் தீபம் குறித்து வந்ததி

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபம் அணைந்து விட்டதாக வதந்தி பரவியதால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் உண்மை இல்லை என்று கோவில் நிர்வாகம் விளக்கம் தந்துள்ளது.

நேற்று மாலை முதல் திருவண்ணாமலை கோவிலில் தீபம்
அணைந்து விட்டதாகவும், கோபுர கலசம் விழுந்து விட்டதாகவும் கொடிமரம் சாய்ந்ததாகவும் வதந்தி பரவியது.

திருவண்ணாமலையில் கிளம்பிய வதந்தி எஸ்எம்எஸ் மூலம் தமிழகம் முழுவதும் படுவேகத்தில் பரவியதால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த வதந்தியையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் தீபம் ஏற்றி குறை நிவர்த்தி- பரிகார பூஜைகளில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பலர் வீடுகளை கழுவி சுத்தம் செய்தனர். பின்னர் வீட்டுக்கு வெளியே கோலமிட்டு நெய் விளக்கு, தேங்காய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். சிவன் கோயிலுக்கு சென்று குடும்பத்தினர் நலமுடன் வாழ வேண்டுமேன சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பின்னர் அந்த தீபத்தை வீட்டுக்குள் எடுத்து சென்று இரவு முழுவதும் அணையாமல் பார்த்து கொண்டனர்.

இந் நிலையில் இது குறித்து கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் தனுஷ் கூறுகையில்,

திருவண்ணாமலை கோவிலில் அணையா விளக்கு என்பது எங்கும் இல்லை. தீபம் அணைந்து விட்டதாக கூறுவது வீண் வதந்தி. கர்ப்ப கிரகத்தில் உள்ள தூண்டாமணி விளக்கு அணைந்து விட்டதாகவும் வதந்தி பரவியுள்ளது.

மேலும் கோவிலில் உள்ள அணைத்து கோபுரங்களிலும் கலசங்கள் நல்ல நிலையில் உள்ளன. எந்த கலசமும் விழவில்லை. இதுபற்றி பரவும் வதந்திகளை பொதுமக்கள் பக்தர்கள் நம்ப வேண்டாம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+