நாளை அதிமக செயற்குழு-பொதுக்குழு கூட்டம்

சென்னை அருகேயுள்ள வானகரத்தில், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த கூட்டங்கள் நடக்கின்றன.
மக்களவைத் தேர்தல் படுதோல்வி்க்குப் பின் மே 27ம் தேதி ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
அதையடுத்து கொடநாடு சென்றுவிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் 5 மாதத்துக்குப் பின் சமீபத்தில் தான் ஊர் திரும்பினார்.
இந்நிலையில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் நடக்கின்றன.
இந்தக் கூட்டங்களுக்குப் பின் கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் சரியாக செயல்படாத மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் பலரும் மாற்றப்படுவர் என்றும் தெரிகிறது.
இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைக்கு உறுப்பினர்களை சேர்ப்பதில் பல நிர்வாகிகளும் சரியாக செயல்படவில்லை. மேலும் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பாக தவறான எண்ணிக்கையைத் தந்தனர். அவர்களுக்கும் உரிய 'பாடம்' கற்பிக்கப்படலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications