தமிழகத்தில் வெயிலுக்கும், மழைக்கும் சண்டை!!

வட கிழக்குப் பருவ மழை இந்த ஆண்டும் உரிய நேரத்தி்ல தொடங்கவில்லை. வழக்கமாக அக்டோபர் 20ம் தேதி மழை தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை மழை இல்லை.
இந் நிலையில் வங்கக்கடலில் வலு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிவுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்று அதிகாலையில் கருமேகங்கள் சூழ்ந்தன. இதனால் உதயத்தைப் பார்க்க முடியவில்லை.
பெரும் மழை வரப் போகிறது என்று அனைவரும் நினைத்திருந்த நேரத்தில் லேசான தூறலைப் போட்டு விட்டு மழை போய் விட்டது. அதன் பிறகும் லேசான மேகமூட்டம் காணப்பட்டது. இருப்பினும் மழை இல்லை.
சிறிது நேரத்தில் வழக்கமான வெயில் ஆரம்பிக்க சரி, இனி மழை அவ்வளவுதான் எனறு நினைத்திருந்த நேரத்தில் மீண்டும் மேகக் கூட்டம் சூழ்ந்து லேசான தூறலைப் போட்டது.
இப்படியாக பிற்பகல் வரை மாறி மாறி வெயிலும், தூறலுமாக இருந்ததால் மக்கள் மழை வருமா, வராதா என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு குழம்பினர்.
இந் நிலையில் பிற்பகலில் மீண்டும் வானம் கருத்தது. லேசான தூறல் மழையும் காணப்பட்டது. இருப்பினும் மீண்டும் வெயில் வந்து மழையைத் தடுத்தது.
இப்படியே வெயிலும், லேசான மழையும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது.
இருப்பினும் வடக்கு மாவட்டங்கள் பலவற்றில் லேசான மழை காணப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவானதாக மாறினால் வரும் நாட்களில் பலத்த மழை பெய்யலாம்.
இன்னும் இரண்டு நாட்களில் வட கிழக்குப் பருவ மழை முழு வீச்சில் பெய்யத் தொடங்கும் எனத் தெரிகிறது. இந்த மழை டிசம்பர் மாதம் வரை நீடிக்கும்.
இந்த ஆண்டு சராசரி மழை அளவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இரவு மற்றும் அதிகாலையில்தான் மழை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications