For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டியூசன்-மாணவியை கற்பழித்த ஆசிரியர்: கைது செய்ய உத்தரவு

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: டியூஷனுக்கு வந்த மாணவியை கற்பழித்த ஆசிரியரைக் கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வள்ளலார் உத்தரவிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி கிராமத்தை சேர்ந்த அருள்ரேகா என்பவர் இதுதொடர்பாக கலெக்டரிடம் ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்.

அதில்,

நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜான்பீட்டர் என்ற ஆசிரியரிடம், மாலை நேரக் கல்வி படித்து வந்தேன். அப்போது ஆசிரியர் என்னை பலாத்காரம் செய்தார். இது குறித்து நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தேன்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் என்பவர் இரு தரப்பினரையும் விசாரித்து பெரியவர்கள் முன்னிலையில் பேசி முடிக்கும்படி அனுப்பி வைத்தார்.

கடந்த 2008 -ம் ஆண்டு மே 26 ல் பெரியவர்கள் பேசி, எனக்கு திருமண வயது வரும் வரை காத்திருப்பதாக திருமண ஒப்பந்தம் போட்டனர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஆனால் என்னை, பட்டிவீரன்பட்டி மாணவியர் விடுதியிலும், அருகிலுள்ள பள்ளியிலும், ஜான்பீட்டர் வலுக்கட்டாயமாக சேர்த்து விட்டார்.

கடந்த 2009 ஏப்பல் மாதம் 25 ல் மறுபடியும் என்னை அழைத்து நிலக்கோட்டை ஆர்.சி., ஆலயத்தில் பாதிரியார் முன்னிலையில், ஏற்கனவே எழுதிய திருமண வாழ்க்கை ஒப்பந்த பத்திரத்தை ரத்து செய்து, இருவருக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி பிரித்து வைத்தனர்.

தீபாவளி விடுமுறைக்கு வந்த நான், கடந்த அக்டோபர் 18 ம் தேதி பட்டிவீரன்பட்டி மாணவியர் விடுதிக்கு செல்ல, சிலுக்குவார்பட்டி பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த போது, ஆசிரியர் ஜான்பீட்டர் மற்றும் ஏழு பேர் ஆட்டோவில் வந்து என்னை வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடுவதாக கூறி, காமலாபுரத்திற்கு தூக்கிச் சென்றனர்.

அங்கு என்னை மானபங்கம் செய்து, என் துணிகளை கழற்றி அடித்தனர். என்னை மிரட்டி, என் மரணத்திற்கு நானே காரணம் என எழுதி வாங்கிக் கொண்டனர்.

மேலும், அருகில் உள்ள ரயில் பாதைக்கு கொண்டு சென்று கொல்ல முயன்றனர். அப்போது அவர்களுடன் இருந்த ஒருவரே என்னை காப்பாற்றினார்.

மறுநாள் காலையில், ஜான்பீட்டர், அவரது மனைவி, குழந்தை தெரசு ஆகியோர் என் மீது பொய் புகார் கூறினர். நிலக்கோட்டை இன்ஸ்பெக்டரும், மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரும் விசாரித்து எனக்கும், ஜான்பீட்டருக்கும் எந்த உடன்பாடும் இல்லை எனக் கூறி, என்னை மீண்டும் பள்ளிக்கு அனுப்பினர்.

காமலாபுரத்தில் என்னை கொல்ல முயன்றவர்களை நேரில் காட்ட தயாராக இருக்கிறேன். ஜான்பீட்டர், அவரது தம்பி தாமஸ் மகிமைராஜ், அம்மா எஸ்ரா, அருகில் குடியிருக்கும் சிங்கராஜ், அவரது மனைவி ஜோஸ்பின் ஆகியோர் என்னையும், என் குடும்பத்தையும் அழித்து விடுவதாக மிரட்டுகின்றனர். எங்களை ஊரைவிட்டு, விரட்ட முயற்சி செய்கின்றனர் என்று புகாரில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, மாணவி அருள் ரேகா குடும்பத்தினரை மாவட்ட கலெக்டர் வள்ளலார் நேரில் அழைத்து விசாரித்தார். விசாரணைக்கு பின்பு, ஆசிரியர் ஜான்பீட்டர் உட்பட நான்கு பேரை கைது செய்ய, நிலக்கோட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X