சென்னையிலிருந்து திருச்செந்தூர், தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து தூத்துக்குடி, திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே செய்தித் தொடர்பாளர் அக்கம்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை சென்டிரல்- தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயிலும், சென்டிரல்- திருச்செந்தூர் இடையே வாரத்திற்கு 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.
சென்னை சென்டிரலில் இருந்து புதன்கிழமைகளில் இரவு 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (0611) மறுநாள் காலை 9.45 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் நவம்பர் 4-ந் தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 2-ந் தேதி வரை இயக்கப்படும்.
தூத்துக்குடியில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (0612) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும். நவம்பர் மாதம் 5-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 3-ந் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.
ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டி, ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டி, 6 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள் ஆகியவை இந்த சிறப்பு ரயிலில் இடம்பெற்றிருக்கும்.
அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, மீளவிட்டான் மற்றும் தூத்துக்குடி மேலூர் ஆகிய நிலையங்களில் சிறப்பு ரயில் நின்று செல்லும்.
சென்டிரல்-திருச்செந்தூர் இடையே வாரம் தோறும் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்டிரலில் இருந்து திங்கட்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 0659) மறுநாள் காலை 6.50 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். அக்டோபர் 31-ந் தேதி முதல் டிசம்பர் 5-ந் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இதே போல் மறுமார்க்கத்தில், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் அதிகாலை 4.35 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும். நவம்பர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 6-ந் தேதி வரை இந்த ரயில் இயக்கப்படும்.
அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி, நெல்லை, செய்துங்கநல்லூர், நாசரேத், குரும்பூர், ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications