சென்னையிலிருந்து திருச்செந்தூர், தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து தூத்துக்குடி, திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே செய்தித் தொடர்பாளர் அக்கம்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை சென்டிரல்- தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயிலும், சென்டிரல்- திருச்செந்தூர் இடையே வாரத்திற்கு 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.
சென்னை சென்டிரலில் இருந்து புதன்கிழமைகளில் இரவு 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (0611) மறுநாள் காலை 9.45 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் நவம்பர் 4-ந் தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 2-ந் தேதி வரை இயக்கப்படும்.
தூத்துக்குடியில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (0612) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும். நவம்பர் மாதம் 5-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 3-ந் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.
ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டி, ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டி, 6 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள் ஆகியவை இந்த சிறப்பு ரயிலில் இடம்பெற்றிருக்கும்.
அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, மீளவிட்டான் மற்றும் தூத்துக்குடி மேலூர் ஆகிய நிலையங்களில் சிறப்பு ரயில் நின்று செல்லும்.
சென்டிரல்-திருச்செந்தூர் இடையே வாரம் தோறும் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்டிரலில் இருந்து திங்கட்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 0659) மறுநாள் காலை 6.50 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். அக்டோபர் 31-ந் தேதி முதல் டிசம்பர் 5-ந் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இதே போல் மறுமார்க்கத்தில், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் அதிகாலை 4.35 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும். நவம்பர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 6-ந் தேதி வரை இந்த ரயில் இயக்கப்படும்.
அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி, நெல்லை, செய்துங்கநல்லூர், நாசரேத், குரும்பூர், ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications