விவசாயி கொலை-கவுன்சிலர், 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

விகேபுரம்: விகேபுரம் விவசாயி கொலையில் அண்ணன, தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தங்கையுடன் கள்ளத் தொடர்பு வைத்ததால் விஷம் கொடுத்து கொன்றதாக அவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

விகேபுரம் அருகேயுள்ள அடையகருங்குளம் மந்தையா காலனியை சேர்ந்த விவசாயி சுப்பையா. கடந்த 9.4.09 அன்று இறந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக விகேபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சுப்பையாவின் இரண்டாவது மனைவி பாப்பாத்தி தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், மீண்டும் விசாரணை நடதத கோரியும, நெல்லை டிஐஜி கண்ணப்பனிடம் மனு கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதில் சுப்பையா விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கல்சுண்டு காலனியை சேர்ந்த சுப்பையாவின் உறவினர் தாசன் மகன்கள் சுப்பிரமணியன், முத்துசெல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில்,தாசன் மகள் வேலம்மாள் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செட்டிமேட்டை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேலம்மாள் பிரித்து பெற்றோர் ஊருக்கு வந்து விட்டார். அங்கு அவருக்கும், சித்தப்பா முறையுள்ள சுப்பையாவுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

இதையறிந்த வேலம்மாளின் சகோதரர்கள் சுப்பையா மீது ஆத்திரம் கொண்டனர். சம்பவதன்று சுப்பையா வீட்டுக்கு சென்ற அவர்கள் மதுவில் விஷம் கலந்து வாயில் ஊற்றினர். இதில் சிறிது நேரத்தில் சுப்பையா துடிதுடித்து இறந்தார். அதன்பின் அவர் அருகில் விஷ பாட்டிலை வைத்து விட்டு சென்று விட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள முருகன அடையகருங்குளம் பஞ்சாயத்து கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+