விவசாயி கொலை-கவுன்சிலர், 2 பேர் கைது
விகேபுரம்: விகேபுரம் விவசாயி கொலையில் அண்ணன, தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தங்கையுடன் கள்ளத் தொடர்பு வைத்ததால் விஷம் கொடுத்து கொன்றதாக அவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
விகேபுரம் அருகேயுள்ள அடையகருங்குளம் மந்தையா காலனியை சேர்ந்த விவசாயி சுப்பையா. கடந்த 9.4.09 அன்று இறந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக விகேபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சுப்பையாவின் இரண்டாவது மனைவி பாப்பாத்தி தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், மீண்டும் விசாரணை நடதத கோரியும, நெல்லை டிஐஜி கண்ணப்பனிடம் மனு கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதில் சுப்பையா விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கல்சுண்டு காலனியை சேர்ந்த சுப்பையாவின் உறவினர் தாசன் மகன்கள் சுப்பிரமணியன், முத்துசெல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில்,தாசன் மகள் வேலம்மாள் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செட்டிமேட்டை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேலம்மாள் பிரித்து பெற்றோர் ஊருக்கு வந்து விட்டார். அங்கு அவருக்கும், சித்தப்பா முறையுள்ள சுப்பையாவுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இதையறிந்த வேலம்மாளின் சகோதரர்கள் சுப்பையா மீது ஆத்திரம் கொண்டனர். சம்பவதன்று சுப்பையா வீட்டுக்கு சென்ற அவர்கள் மதுவில் விஷம் கலந்து வாயில் ஊற்றினர். இதில் சிறிது நேரத்தில் சுப்பையா துடிதுடித்து இறந்தார். அதன்பின் அவர் அருகில் விஷ பாட்டிலை வைத்து விட்டு சென்று விட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள முருகன அடையகருங்குளம் பஞ்சாயத்து கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications