For Daily Alerts
Just In
மதுரை: யானையை கடித்த தெரு நாய்!
மதுரை: மதுரையில் யானையை தெரு நாய் கடித்தது. அதற்கு 'ரேபிஸ்' நோய் தாக்காமல் இருக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை அருகே பேரையூரில் 20 வயதான லட்சுமி என்ற பெண் யானை தனியாரிடம் வளர்கிறது. இந்த யானையின் காலை தெரு நாய் கடித்தது.
தெரு நாய் என்பதால் 'ரேபிஸ்' நோய் தாக்கும் அபாயம் உண்டு என்பதால் யானைகளுக்கான சிறப்பு மருத்துவர் ஜான் பாட்ஷாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். யானைக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
3 மாதங்களுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் புகுந்த தெரு நாய் ஒன்று, ஆடி வீதியில் யானை பார்வதியையும், ஒட்டகத்தையும் கடித்ததால், 'ரேபிஸ்' நோய் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.
Comments
Story first published: Friday, October 30, 2009, 16:19 [IST]