For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓடும் பஸ்சி்ல் டிரைவருக்கு திடீர் வலிப்பு-பயணிகள் தப்பினர்!

Google Oneindia Tamil News

Bus
விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு பஸ்சை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு திடீர் வலிப்பு நோய் தாக்கியதால் அவர் செயலிழந்தார். ஆனாலும் அவர் சிரமப்பட்ட பஸ்ஸை நிறுத்திவிட்டதால் பயணிகள் தப்பினர்.

விழுப்புரத்திலிருந்து மேல்மலையனூருக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்சை டிரைவர் மனோகர் (49) என்பவர் ஓட்டிச் சென்றார்.

விழுப்புரம் நான்கு முனை சிக்னல் அருகே சென்றபோது டிரைவருக்கு திடீரென வலிப்பு தாக்கியது. இதனால் அவர் செயலிழந்து போனாலும் பெரும் சிரமப்பட்டு பஸ்சை நிறுத்திவிட்டார்.

அரசு மருத்துவமனை அருகிலேயே பஸ் நின்றதால் உடனே பயணிகள் அவரை அங்கு சேர்த்தனர்.

இது குறித்து விழுப்புரம் காவல் நிலையத்திற்கும், போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளுக்கம் தகவல் தரப்பட்டது. ஆனால் அதிகாரிகள் யாருமே வரவில்லை.

விபத்து நடந்து உயிர் பலிகள் ஏற்பட்டால் தான் வர வேண்டுமா?.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X