போலி சிபிஐ-வருமான வரி 'அதிகாரிகள்' கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து பணம், நகைளை சுருட்டி வந்த கும்பல் பிடிபட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில மாதங்களாக போலி அடையாள அட்டைகளைக் காட்டி, வருமான வரித்துறை, சிபிஐ அதிகாரிகள் என்று கூறிகொண்டு நிறுவனங்கள், வீடுகளில் ஒரு கும்பல் கொள்ளையடித்து வந்தது.

சமீபத்தில் பூக்கடை மூர் தெருவில் ஏ.சி விற்கும் கடையிலும் இதே போல 'ரெய்ட்' போன இக் கும்பல் கடையில் இருந்த ரூ.3.5 லட்சம் பணத்துடன் தப்பியது.

இதையடுத்து பூக்கடை துணைக் கமிஷனர் பெரிய்யய்யா துறைமுகம் உதவி கமிஷனர் மரிய ஜார்ஜ், இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கர், குணவர்மன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தப் படையினர் தீவிர விசாரணை நடத்தி சிபிஐ, வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த முகம்மது காஜி (34), நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானைச் சேர்ந்த கணேஷ் (48), ஓட்டேரியைச் சேர்ந்த பாஸ்கர் (31), உத்தமப்பாளையத்தைச் சேர்ந்த முரளி (48), திருமுல்லைவாயலைச் சேர்ந்த ம், 5. பாஸ்கர் (27) ஆகிய 5 பேரைக் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து ரூ.1.6 லட்சம் பணம், போலி வருமான வரி. சிபிஐ அடையாள அட்டைகள், சோதனை போடுவதற்கான போலி சான்றிதழ்கள், கை விலங்குகள், சிபிஐ, வருமான வரித்துறை ரப்பர் ஸ்டாம்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் கணேஷ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்,
நான் கடந்த 9 ஆண்டுகளாகவே வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து நகை, பணத்தை கொள்ளையடித்து வந்தேன் என்று கூறியுள்ளான். ஏற்கனவே குண்டர் சட்டத்திலும் சிறையில் இருந்துள்ள இவன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+