ஸ்பெக்ட்ரம்: புகார்கள் மட்டுமே ஊழலுக்கு ஆதாரமல்ல- பிரணாப்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக கூறப்படும் புகார்கள் மட்டுமே ஊழலுக்கு ஆதாரம் ஆகிவிடாது என்று மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி கூறினார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தொலைத்தொடர்பு துறை அமைச்சக அலுவலகங்களில் சிபிஐ விசாரணை நடத்தி வருவதால், அதன் அமைச்சர் ராஜா ராஜினாமா செய்ய வேண்டியதில்லை.
புகார்கள் மட்டுமே ஊழலுக்கு ஆதாரம் ஆகி விடாது என்பதை நான் முதலில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மத்திய விஜிலென்ஸ் ஆணையத்தின் உத்தரவுப்படி சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் விசாரணை அறிக்கை வரும் வரை பொறுத்திருப்போம்.
அதே நேரத்தில் ஊழல் நடக்கவில்லை என்றோ அல்லது நடவடிக்கை எதுவும் கூடாது என்றோ நான் கூறவில்லை. கூட்டணி என்றால் ஊழல் கூட்டணி என்றும் அர்த்தமல்ல.
அடுத்த 2 ஆண்டுகளில் 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். 2011-2012ம் ஆண்டுக்குள் நிதி பற்றாக்குறை 5.5 சதவீதமாக கட்டுப்படுத்தப்படும் என்றார்.
பி்ன்னர் டெல்லியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் சார்பில் நடந்த மாநாட்டில் அவர் பேசுகையி்ல்,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவி காலம் 2014ம் ஆண்டு முடியும்போது எனது அமைச்சர் பதவிக்காலமும் முடியும். அப்போது எனக்கு 79 வயது ஆகிவிடும். அந்த சமயத்தில் நான் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன்.
என்னிடம் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. தற்போது அவற்றை படிக்க நேரம் இல்லை. தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருக்கும் போது அவற்றை எல்லாம் படிக்கப் போகிறேன் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications