வக்கீல்களின் நடத்தை-தீர்ப்பில் உயர்நீதிமன்றம் 'சூடு'
சென்னை: நான்கு போலீஸ் அதிகாரிகள் மீது கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள சென்னை உயர்நீதி்மன்றத் தீர்ப்பில், வக்கீல்களின் நடத்தை குறித்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, ஆர்.பானுமதி ஆகியோர் பிறப்பித்த தீர்ப்பில் நான்கு போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ள அதே நேரத்தில் வக்கீல்களின் நடத்தை குறித்தும் நீதிபதிகள் விமர்சிக்கத் தவறவில்லை.
இதுகுறித்து அவர்களின் தீர்ப்பில், வக்கீல்களின் நடத்தை, ஒழுங்கு குறித்த சில வெளிப்படையான உண்மைகளை நாம் புறக்கணித்து விட முடியாது. அவர்கள் திருந்த வேண்டும்.
தரம் தாழ்ந்து போவது, தகுதிகள் இல்லாதது, பாரபட்சமாக நடந்து கொள்வது போன்ற வக்கீல்களின் குணத்தால், ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை தகர்ந்து போய் விடுகிறது.
தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்று பெரிய அளவில் பேசுகிறோம். ஆனால் கடந்த காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் எத்தனை முறை நீதிமன்றப் புறக்கணிப்புகளை வக்கீல்கள் மேற்கொண்டுள்ளனர் என்பதைப் பார்த்தால் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இதை வக்கீல்கள் நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
வக்கீல்களின் வேலைநிறுத்தம் வழக்கமான ஒரு விஷயமாக நாளுக்கு நாள் மாறி வருகிறது. இதனால் கோர்ட் பணிகள் பாதிக்கப்படுகின்றன. தீர்ப்புகள் கூறப்படுவதும் பாதிப்படைகிறது.
யாருக்கும் பாதிப்பு இல்லாமல், வழக்குகளுக்குப் பாதிப்பில்லாமல், கோர்ட் நேரத்தை வீணடிக்காத வகையில் வேறு வழிகளில் போராட்டங்களை நடத்த முடியும். தங்களது கோரிக்கைகளை யாரிடம் வெளிப்படுத்த வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் அதைத் தெரிவிக்கும் வகையில், அவர்களின் கவனத்தை மட்டும் ஈர்க்கும் வகையில் போராட்டங்களை செய்யக் கூடாதா?.
உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்க உறுப்பினர்கள் யாரும் சக உறுப்பினர்களின் கிரிமினல் நடவடிக்கைகளுக்குத் துணை போக மாட்டார்கள் என்று உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் உறுதியளித்திருப்பதை நாங்கள் பாராட்டுகிறோம்.
வக்கீல்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை போலீஸார் சுதந்திரமாக விசாரிக்கலாம். அதில் எந்தத் தடையும் இல்லை. தேவைப்பட்டால் குற்றப்பத்திரிக்கைகளையும் தாக்கல் செய்யலாம்.
சமூகத்தில் புரையோடிப் போயுள்ள தார்மீக நெறிகளின் சீ்ர்குலைவு, வழக்கறிஞர்களையும் பாதித்துள்ளது. ஒரு தொழிலில் ஈடுபடும்போது அதில் அங்கீகாரம் பெறும் வகையில் உழைக்க வேண்டியது, செயல்பட வேண்டியது அவசியம். மாறாக, பெயருக்கு அந்தத் தொழிலில் இருப்பது சரியல்ல.
தங்களது தொழிலின் முக்கியத்துவத்தை, மையக் கருத்தை பல வக்கீல்கள் மறந்து போய் விடுகிறார்கள். தங்களது சுய முன்னேற்றத்துக்காக வக்கீல் தொழிலை மேற்கொள்ளக் கூடாது. மாறாக, சட்டத்திற்கு உட்பட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் கோர்ட்டுகளுக்கும், மக்களுக்கும் உதவியாக அவர்கள் இருக்க வேண்டும்.
வருங்காலத்தில், பார் நிர்வாகிகள், புதிய வக்கீல்களுக்கு திறம்பட பணியாற்றத் தேவையான பயிற்சிகளை அளிப்பார்கள் என்று நம்புகிறோம். ஆசைப்படுகிறோம்.
வக்கீல் தொழிலின் புனிதம், தார்மீக நெறிமுறைகள், தரம் ஆகியவற்றைக் காக்க வேண்டிய பொறுப்பு பார் கவுன்சிலுக்கு உண்டு.
கோர்ட் வளாகத்திற்குள் அரசியல் செயல்பாடுகளோ, ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட போராட்டங்களோ நடத்தக் கூடாது என்று 2006ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி உயர்நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது. அதை வக்கீல்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications