5ம் தேதி என்எல்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

நெய்வேலி: என்எல்சி தொழிற்சங்க கூட்டமைப்பினர் வரும் 5 ம் தேதி இரவு முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் ஊக்க ஊதியம் தொடர்பாக கடந்த 8 ம் தேதி புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுசவும், பாட்டாளி தொழிற்சங்கமும் கையெழுத்திட்டன.

அங்கீகரிக்கப்படாத சிஐடியு உள்ளிட்ட 13 தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர், ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஒப்பந்தத்தை மாற்றக்கோரி தொழிலாளர்களிடம் கையெழுத்து இயக்கமும், வேலை நிறுத்தம் செய்வது குறித்த வாக்கெடுப்பும் நடத்தினர். இதில், வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து சுமார் 8 ஆயிரம் தொழிலாளர்கள் வாக்களித்தனர்.

இதனையடுத்து, கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சிஐடியு தலைவர் குப்புசாமி தலைமையில் நடந்தது. இதில், எச்எம்எஸ் , அண்ணா தொழிற்சங்க பேரவை, தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகிய சங்கங்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்ட முடிவில் ஸ்டிரைக்கை வலியுறுத்தி வரும் 1, 2 ம் தேதிகளில் வாயிற்கூட்டங்கள் நடத்துவது என்றும், 5 ம்தேதி இரவு பொதுக் கூட்டம் நடத்தி வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிடுவது என்றும், அன்று இரவு 10 மணி முதல் வேலை நிறுத்தத்தை தொடங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+