நவம்பர் மாதம் முழுக்க நிலையற்ற வர்த்தகம்தான்!
இந்த நவம்பர் மாதம் முழுக்கவே இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருக்காது என்றும் நிலையற்ற வர்த்தகம் காரணமாக சற்று இழப்புகளும் முதலீட்டாளர்களுக்கு நேரலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளது.
17000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ் கடந்த இரு வாரங்களாக பெரும் ஊசலாட்டத்தில் உள்ளது. இதனால் மீண்டும் இறங்குமுகத்துக்குச் சென்ற சென்செக்ஸ், இப்போது 16000 புள்ளிகளுக்கும் கீழே தள்ளாடிக் கொண்டுள்ளது.
இந்த ஊசலாட்ட நிலை நவம்பர் மாதம் முழுக்க தொடரும் என்ரும் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் பங்குச் சந்தை நிபுணர்கள் எச்சரிகத்துள்ளனர்.
ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தினேஷ் தாக்கர் கூறுகையில், 5000 புள்ளிகளுக்குக் கீழ்தான் நிப்டியின் வர்த்தகம் இருக்கும் என்றும், 4600 புள்ளிகள் வரை அது இறங்கிச் செல்லும். அதே நேரம் சென்செக்ஸ் 15800 புள்ளிகள் வரை இறங்கும் என்றும் கூறினார். ஆனால் இது பங்குச் சந்தை பலவீனமடைந்துவிட்டதைக் குறிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலைக்குக் காரணம் அமெரிக்க டாலரின் பலவீனமான போக்குதான் என்றும், டாலர் மீண்டும் வலுவடைந்தால் இந்தியா போன்ற ஆசிய பங்குச் சந்தைகளின் குறியீட்டெண் ஏறுமுகம் காட்டும் என்றும் கூறப்படுகிறது.
இதுதவிர, முதலீட்டாளர்களின் ஆர்வம் கடந்த அக்டோபரில் இருந்தது போல இப்போது இல்லை. இதுவும் நவம்பர் மாத வர்த்தகத்தில் எதிரொலிக்குமாம்.
டெலிகாம் பங்குகளில் முதலீடு செய்வது இந்த காலத்தில் சற்று பலனளிக்கும். ஆனால் ரியல் எஸ்டேட் பங்குகளில் முதலீடு செய்வது குறுகிய கால நோக்கில் தவிர்க்கப்பட வேண்டியது என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications