கொல்லப்பட்ட குட்டி வீரப்பனின் உடல் தோண்டி எடுப்பு
சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான ராஜு என்கிற குட்டி வீரப்பனின் உடலை போலீஸார் தோண்டி எடுத்துள்ளனர்.
வீரப்பனின் குழுவில் இடம் பெற்றிருந்தவர் ராஜு. இவருக்கு குட்டி வீரப்பன் என்ற பெயரும் உண்டு. 2 நாட்களுக்கு முன்பு குட்டி வீரப்பனை அடையாளம் தெரியாத சிலர் கொலை செய்தனர்.
அவரது உடலை கல்ராயன் மலைப் பகுதியில் புதைத்து விட்டனர். இதுகுறித்து குட்டி வீரப்பனின் மகன் சுரேஷ்குமார் போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸார் கல்ராயன் மலைப் பகுதியில் குட்டி வீரப்பன் புதைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து உடலை தோண்டி எடுத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குட்டி வீரப்பன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை முடிந்து கடந்த வாரம்தான் விடுதலையானார். ஆனால் தன் மீது ஏராளமான வழக்குகள் இருப்பதால் அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையி்ல்தான் அவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications