முந்தைய பாஜக ஆட்சியில் திமுகவும் இருந்ததை மறந்து விட்டாரா ராசா? - விஜயகாந்த்
சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ராசா பதவி விலகாதது மட்டுமல்ல, ஏற்கனவே பாரதீய ஜனதா ஆட்சியில் தான் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டுகிறார். அந்த ஆட்சியிலும் தி.மு.க. பங்கு பெற்றதும் என்பதை மறந்து போய்விட்டதா? இவை எல்லாம் திசை திருப்பும் முயற்சியாகும். ராசாவிடம் இருந்து இதுவரையில் மக்கள் ஏற்கத்தக்க பதில் வரவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:
மத்திய தி.மு.க. அமைச்சர் ராசாவின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்புத்துறை அலுவலகத்தில், இதுவரை இல்லாத முறையில் மத்திய புலனாய்வுத்துறை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சோதனை செய்துள்ளது. இந்த அமைச்சகத்தின் அலைக்கற்றை வழங்கியதில் இந்திய அரசுக்கு சுமார் 60 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதில் இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஏன் ஏலம் விடப்படவில்லை..?
இந்த அலைக்கற்றை ஏன் ஏலத்திற்கு விடப்படவில்லை? அதற்கு பதிலாக யார் முதலில் மனு கொடுத்தார்களோ அந்த வரிசையில் சந்தை நிலவரத்தைப் பார்க்காமல் லைசென்ஸ் வழங்கியது ஏன்? 2001-ம் ஆண்டில் ஏல முறை இதே துறையால் கையாளப்பட்டுள்ளதை மறைப்பது ஏன்?
நான் தவறே செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் ராசா வாதிடுகிறார். பிரதமர் மன்மோகன்சிங், எதிர்க்கட்சியினர் புகார் சொல்வதும், அது விசாரிக்கப்படுவதும் இயற்கை தான் என்கிறார்.
மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதித்ததே இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் உண்மையிருப்பதனால் தான். பிரதமரும், நிதி அமைச்சரும் மறுப்பது விசாரணைக்கு குந்தகம் ஏற்படாதா? மத்திய அரசு ஊழலை ஒழிக்கும் லட்சணம் இதுதானா?
மத்திய அமைச்சர் ராசா பதவி விலகாதது மட்டுமல்ல, ஏற்கனவே பாரதீய ஜனதா ஆட்சியில் தான் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டுகிறார். அந்த ஆட்சியிலும் தி.மு.க. பங்கு பெற்றதும் என்பதை மறந்து போய்விட்டதா? இவை எல்லாம் திசை திருப்பும் முயற்சியாகும். ராசாவிடம் இருந்து இதுவரையில் மக்கள் ஏற்கத்தக்க பதில் வரவில்லை.
பிரதமர், மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராசாவை பதவி நீக்கம் செய்து முறையான விசாரணை நடத்த வழிவகுப்பாரா? என்ற நல்ல தீர்ப்பை நாடு எதிர்பார்க்கிறது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications