முந்தைய பாஜக ஆட்சியில் திமுகவும் இருந்ததை மறந்து விட்டாரா ராசா? - விஜயகாந்த்
சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ராசா பதவி விலகாதது மட்டுமல்ல, ஏற்கனவே பாரதீய ஜனதா ஆட்சியில் தான் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டுகிறார். அந்த ஆட்சியிலும் தி.மு.க. பங்கு பெற்றதும் என்பதை மறந்து போய்விட்டதா? இவை எல்லாம் திசை திருப்பும் முயற்சியாகும். ராசாவிடம் இருந்து இதுவரையில் மக்கள் ஏற்கத்தக்க பதில் வரவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:
மத்திய தி.மு.க. அமைச்சர் ராசாவின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்புத்துறை அலுவலகத்தில், இதுவரை இல்லாத முறையில் மத்திய புலனாய்வுத்துறை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சோதனை செய்துள்ளது. இந்த அமைச்சகத்தின் அலைக்கற்றை வழங்கியதில் இந்திய அரசுக்கு சுமார் 60 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதில் இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஏன் ஏலம் விடப்படவில்லை..?
இந்த அலைக்கற்றை ஏன் ஏலத்திற்கு விடப்படவில்லை? அதற்கு பதிலாக யார் முதலில் மனு கொடுத்தார்களோ அந்த வரிசையில் சந்தை நிலவரத்தைப் பார்க்காமல் லைசென்ஸ் வழங்கியது ஏன்? 2001-ம் ஆண்டில் ஏல முறை இதே துறையால் கையாளப்பட்டுள்ளதை மறைப்பது ஏன்?
நான் தவறே செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் ராசா வாதிடுகிறார். பிரதமர் மன்மோகன்சிங், எதிர்க்கட்சியினர் புகார் சொல்வதும், அது விசாரிக்கப்படுவதும் இயற்கை தான் என்கிறார்.
மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதித்ததே இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் உண்மையிருப்பதனால் தான். பிரதமரும், நிதி அமைச்சரும் மறுப்பது விசாரணைக்கு குந்தகம் ஏற்படாதா? மத்திய அரசு ஊழலை ஒழிக்கும் லட்சணம் இதுதானா?
மத்திய அமைச்சர் ராசா பதவி விலகாதது மட்டுமல்ல, ஏற்கனவே பாரதீய ஜனதா ஆட்சியில் தான் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டுகிறார். அந்த ஆட்சியிலும் தி.மு.க. பங்கு பெற்றதும் என்பதை மறந்து போய்விட்டதா? இவை எல்லாம் திசை திருப்பும் முயற்சியாகும். ராசாவிடம் இருந்து இதுவரையில் மக்கள் ஏற்கத்தக்க பதில் வரவில்லை.
பிரதமர், மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராசாவை பதவி நீக்கம் செய்து முறையான விசாரணை நடத்த வழிவகுப்பாரா? என்ற நல்ல தீர்ப்பை நாடு எதிர்பார்க்கிறது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications