கர்நாடக சிக்கல்: டெல்லியில் பேச்சு-புதிய 'சமாதான பார்முலா'!
டெல்லி: கர்நாடகத்தில் முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ரெட்டி சகோதரர்கள் தலைமையிலான அதிருப்தியாளர்கள் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியின் உதவியை நாடியுள்ளனர்.
ஆனால், கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த புதிதி்ல் எதியூரப்பாவுக்கு மெஜாரிட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காக பல காங்கிரஸ் எம்எல்ஏக்களையே விலைக்கு வாங்கி, பாஜகவுக்கு கட்சி தாவ வைத்த ரெட்டிகளுடன் கைகோர்க்க காங்கிரஸ் விரும்பவில்லை. இதனால் வேறு வழிகளை ரெட்டி சகோதரர்கள் ஆராய ஆரம்பித்துள்ளனர்.
டெல்லியில் ரெட்டி கோஷ்டி:
கர்நாடக பாஜகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காண இப்போது டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அதிருப்தி கோஷ்டிக்கு தலைமை வகிக்கும் அமைச்சர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்தன ரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோர் இன்று டெல்லிக்கு வந்து அத்வானி, அருண் ஜேட்லி, தங்களுக்கு முழு ஆதரவு தந்து வரும் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜ்நாத் சிங்கை சந்திக்கவுள்ளனர்.
இந் நிலையில் நேற்று இவர்களால் முதல்வர் பதவிக்கு முன் நிறுத்தப்பட்டுள்ள கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டார் தலைமையி்ல் சில மூத்த எம்எல்ஏக்கள் ஜேட்லி-சுஷ்மா- ராஜ்நாத்தை சந்தித்தனர்.
எதியூரப்பா கோஷ்யும் வந்தது:
அதிருப்தி கோஷ்டி டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் தனது தரப்பு நிலையை எடுத்துச் சொல்ல அமைச்சர்கள் ஆச்சார்யா, கட்டா சுப்பிரமணிய நாயுடு, அசோக் உள்ளிட்ட மூத்த தலைவர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார் எதியூரப்பா.
எதியூரப்பாவும் வருகிறார்:
இவர்களும் ஜேட்லி-சுஷ்மா- ராஜ்நாத்தை சந்தித்து எதியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கக் கூடாது என வலியுறுத்தினர். மேலும் இவர்கள் அத்வானியையும் சந்தித்தனர்.
இந் நிலையில் நாளை எதியூரப்பாவும் டெல்லி செல்கிறார்.
அனந்த்குமாரின் 'உள்குத்து':
எதியூரப்பாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலால் மகிழ்ச்சியடைந்துள்ள கர்நாடக மாநில மூத்த பாஜக தலைவரான அனந்த்குமார் (இவருக்கு டெல்லி தலைமையிடம் செல்வாக்கு அதிகம். காரணம், இவர் ஆர்எஸ்எஸ்சின் முழு ஆசிர்வாதம் பெற்றவர்) டெல்லியில் முடிந்த அளவுக்கு தன் 'உள்குத்து' வேலைகளை செய்து வருகிறார்.
எதியூரப்பாவுக்கு எதிரான நிலை எடுத்துள்ளவர்களை இவர் இதுவரை விமர்சிக்கவில்லை. அதே நேரத்தில் பொதுவான ஆள் போல வெளியில் நடிக்கும் அனந்த்குமார், எதியூரப்பா எதிர்ப்பாளர்களுக்கு மறைமுக ஆதரவு தந்து வருகிறார்.
ஜாதிரீதியில் அணி திரளும் எம்எல்ஏக்கள்:
அவரும் டெல்லியில் மூத்த தலைவர்களை தனியே சந்தித்து வருவதால் எதியூரப்பா அதிர்ந்து போயிருந்தாலும், தன்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்கினால் அடுத்து வேறு யாரும் ஆட்சியமைத்துவிட முடியாத வகையில் தனது சமூகததைச் சேர்ந்த எம்எல்ஏக்களை (இவர் முற்பட்ட லிங்காயத்து ஜாதியை சேர்ந்தவர்) முழு அளவில் வளைத்து வைத்துள்ளார்.
எதிர்கோஷ்டி வசம் 60 எம்எல்ஏக்கள், எதியூரப்பா வசம் 35 எம்எல்ஏக்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இன்னொரு 35 பேர் நடுநிலை வகித்து வருகின்றனர்.
காங்கிரசுக்கு தூது:
இதனால் எந்த கோஷ்யும் ஒரு கோஷ்டியின் ஆதரவு இல்லாமல் ஆட்சியில் தொடரவோ, புதிதாக ஆட்சியமைக்கவோ முடியாத நிலை உள்ளது. அதே நேரத்தில் இதில் எந்த கோஷ்டி காங்கிரசுடன் சேர்ந்தாலும் ஆட்சியமைக்க முடியும்
இதனால் தான் காங்கிரசுக்கு தூது அனுப்பியுள்ளனர் ரெட்டி சகோதரர்கள். ஆனால், பாஜக விஷயத்தில் மூக்கை நுழைத்து அந்தக் கட்சியின் உட்கட்சிப் பூசலுக்கு நாம் தான் காரணம் என்ற பெயரை பெற்றுவிடக் கூடாது என்று காங்கிரஸ் கருதுகிறது.
நிராகரித்த காங்கிரஸ்:
அவர்களாகவே கவிழ்ந்தால், இப்போதுள்ள கோஷ்டிப் பூசலால் அடுத்த தேர்தலில் பாஜக நிச்சயம் தோற்கும் என காங்கிரஸ் கருதுகிறது. இதனால் யாருக்கும் எந்தவிதமான ஆதரவும் இல்லை என்று காங்கிரஸ் கூறிவிட்டது.
இந் நிலையில் எதியூரப்பாவை முதல்வர் பதவிலியிலிருந்து நீக்க முடியாது. அதே நேரத்தில் உங்களது மற்ற எல்லா கோரிக்கைகளையும் ஏற்கத் தயார் என்று அதிருப்தியாளர்களிடம் பாஜக தலைமை தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
புதிய 'சமாதான பார்முலா':
இதனால் எதியூரப்பாவின் அதிகாரம் பெருமளவு பறிக்கப்பட்டு, ரெட்டிகள் சொல்லும் நபர்கள் துணை முதல்வர்களாக, முக்கிய அமைச்சர்களாக நியமிக்கபட்டும், ரெட்டிகளுக்கு ஆகாத ஷோபா உள்ளிட்ட சில அமைச்சர்கள் நீக்கப்பட்டும் ஓரிரு நாளில் சிக்கல் தீர்க்கப்படலாம் என்கிறார்கள்.
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் பாஜகவுக்கு 117 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 74 உறுப்பினர்களும், மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு 27 உறுப்பினர்களும், 6 சுயேச்சைகளும் உள்ளனர்.
ஆட்சியமைக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா? மொத்தமாக கண்ட்ரோலை எடுத்த பாஜக..லிஸ்டோடு டெல்லிக்கு ஓடிய எடப்பாடி! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
ஆந்திர மாடல்.. விஜயை வைத்து பாஜக போட்ட பலே ப்ளான்! எண்ட் கார்டு போட்ட பனையூர்! அவ்வளவு தானா? -
காங்கிரஸை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும்.. அதிமுகவிடம் மல்லுக்கட்டும் பாஜக.. எவ்வளவு சீட் தெரியுமா? -
விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு அழைத்த பாஜக நிர்வாகியின் பதவி பறிப்பு.. நயினார் நாகேந்திரன் அதிரடி -
நிதிஷ் குமாரின் நிலை எடப்பாடிக்கும் வருமா.. ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை.. நயினார் நாகேந்திரன் பதில் -
கதறும் பெங்களூர் PGகள்.. "ஒரு வாரம் தான் சமாளிக்க முடியும்!" சிலிண்டர் பற்றாக்குறையால் சாப்பாடு கட் -
மாஸ் வைத்து ஜெயிக்க முடியாதுங்க.. அண்ணாமலையை சீண்டிய குஷ்பு.. பாஜகவில் வெடித்த மோதல் -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
திணறடிக்கும் பெங்களூர் டிராபிக்.. இளம்பெண் எடுத்த வினோத முடிவு.. இப்போ பிரச்சனை இல்லாமல் பறக்கறாரு












Click it and Unblock the Notifications