ரூ.30 மானியம் திடீர் ரத்து-தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது
சென்னை: பொது மக்கள் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கு தமிழக அரசு அளித்து வந்த ரூ.30 மானியம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டரின் ரூ.316 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது.
2008ம் ஆண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததையடுத்து சமையல் கேஸ் விலையும் உயர்த்தப்படும். சிலிண்டர் விலையை ரூ.288ல் இருந்து ரூ.339 ஆக மத்திய அரசு உயர்த்தியது.
இதையடுத்து பொது மக்களுக்கு சுமைமையக் குறைக்க டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட சில மாநில அரசுகள் சமையல் எரிவாயுக்கு ரூ.50 மானியம் அளித்தன. இதனால் இந்த மாநில மக்களுக்கு ரூ. 289க்கு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மாநிலங்களைத் தொடர்ந்து தமிழக அரசும் கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் சிலிண்டருக்கு ரூ.30 மானியம் அளித்தது. ஒரு சிலிண்டருக்கு மட்டும் இந்த மானியம் அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 286 ஆக இருந்து வந்தது.
இந்நிலையில் சிலிண்டருக்கான உயர்வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் அதன் விலையை ரூ.339ல் இருந்து ரூ.314 ஆக மத்திய அரசு குறைத்தது.
ஆனாலும் சிலிண்டருக்கு தமிழக அரசு அளித்து வந்த மானியம் தொடர்ந்தது. இதனால் நிறுத்தாமல் அளித்துவந்தது.
இப்போது மானியம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று முதல் சிலிண்டர் விலை ரூ.316 ஆக உயர்ந்துள்ளது.
இந்த மானியம் ரத்து மூலம் தமிழக அரசுக்கு மாதம் ரூ. 7 கோடி மிச்சமாகும்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications