For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரள மாணவர்களின் சதி அம்பலம்- நெல்லை கல்லூரியில் கொலை தவிர்ப்பு

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: நெல்லை பொறியியல் கல்லூரியில் உடன் பயிலும் மாணவனைக் கொல்ல கேரள மாணவர்கள் தீட்டிய சதி அம்பலமானது. போலீஸ் சோதனையில் அரிவாள், கத்திகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் அங்குள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள், நமது கல்லூரி கேன்டீன் அருகில் வைத்துதான் அவனை அரிவாளால் வெட்ட வேண்டும். சத்தம் வெளியே வராமல் பார்தது கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குள் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தனர்.

இதைக் கேட்ட அருகில் இருந்தவர்கள் வடசேரி பஸ் நிலையத்தில் பாதுகாப்புக்கு இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் வடசேரி பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் தங்களை நோக்கி வருவதை அறிந்ததும் கும்பலாக நின்று கொண்டிருந்த வாலிபர்கள் தங்கள் கையிலிருந்த பைகளை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.
அவர்கள் விட்டு்ச் சென்ற 10 பைகுகளை போலீசார் சோதனை செய்தபோது அதில், அரிவாள்கள், கத்திகள், ஒரு லேப்டாப் கம்யூட்டர் ஆகியவை இருந்தன.

மேலும் அதிலிருந்த புத்தகங்கள், மற்றும் ஆவணங்களை சோதித்து பார்த்ததில் அவர்கள் அனைவரு்ம் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருவதும் தெரிய வந்தது.

உடன் பயிலும் யாரையோ கொல்லும் திட்டத்துடன் இருந்த இவர்களது சதி போலீசாரின் துரிதமான நடவடிக்கையால் தடுக்கப்பட்டுள்ளது.

தப்பியோடிய அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X