மதுரையிலும் அண்ணா பல்கலை-அழகிரி!
மதுரை: மதுரையில் அண்ணா பல்கலைக்கழகம் அமைக்க முதல்வர் உறுதி அளித்துள்தாக மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.
எம்பி மேம்பாட்டு நிதியின் கீழ், திருமண மண்டபம் கட்ட உத்தங்குடியில் பூமி பூஜை நடந்தது. பூஜைக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர்,
இப் பகுதியி்ல் கிரானைட் கற்களுக்கு பாலிஷ் போடும் தொழிற்சாலைக்கு நவம்பர் 21ல் அடிக்கல் நாட்டப்படும். பெண்கள் சுய உதவிக் குழுவினருக்கு கிரானைட் கற்கள் வழங்கப்பட்டு தொழில் புரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரையில் அண்ணா பல்கலைக்கழகம் அமைப்பதாக முதல்வரும் உயர் கல்வித் துறை அமைச்சரும் உறுதி அளித்துள்ளனர் என்றார்.
மலேசியா பயணம்:
இந் நிலையில் அழகிரி இன்று இரவு அரசுமுறைப் பயணமாக மலேசியா செல்கிறார்.
அமைச்சரான பின் அவரது முதல் வெளிநாட்டு்ப் பயணம் இது. மலேசிய பயணத்தை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா உள்பட வேறு சில நாடுகளுக்கும் அவர் செல்வார் என்று தெரிகிறது.