Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்ட மாணவர்கள் மோதல்-வீசசரிவாள்களால் வெட்டு

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் தனியார் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் நள்ளிரவில் வீச்சரிவாள்களால் தாக்கிக் கொண்டனர். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

சேலம் கோரிமேடு அருகே உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் சென்னையை சேர்ந்த விக்னேஸ்வரராஜ் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் சதீஷ். இவர் 2ம் ஆண்டு படிக்கிறார்.

நேற்றிரவு இவர்கள் டீ சாப்பிட ஏற்காடு மெயின் ரோட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு 3ம் ஆண்டு மாணவரான கரூரை சேர்ந்த பிரபாகரன் வந்தார்.

அப்போது இந்த மூவருக்கும் இடையே வாக்குவாதம ஏற்பட்டது. இரு தரப்பும் கைகலப்பில் ஈடுடவே இதை அறிந்த மேலும் சில சட்டக் கல்லூரி மாணவர்களும் அங்கு வந்து இரு பிரிவாக மோதிக் கொண்டனர்.

சிலர் வீச்சரிவாள்களால் தாக்கினர். இதில் விக்னேஸ்வராஜ், சதீஷ், பிரபாகரன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டமாக கூடி தாக்குதல், ஆயுதங்கள் வைத்திருத்தல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்தக் கல்லூரியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+