For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாராபுரத்தில் தவறான சிகிச்சையால் சிறுமி பலி

Google Oneindia Tamil News

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் 8 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார்.

தாராபுரத்தைச் சேர்ந்தவர் மஸ்தான். இவருக்கு 8 வயதில் 3ம் வகுப்பு படிக்கும் பகத்சீனா பர்வின் என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டவுடன், தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

பர்வீனுக்கு அரசு மருத்துவர்கள் காய்ச்சலுக்கான ஊசி போட்டனர். ஆனால் ஊசி போட்ட பின்னர் சிறுமிக்கு பார்வை பறிபோனது. இதையடுத்து தாராபுரம் அரசு மருத்துவர்கள் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் என கூறி மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பர்வீனை ஒட்டன்சந்த்திரம் கொண்டு வந்து தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் அங்கு சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

தாராபுரத்தில் போடப்பட்ட வீரியம் கொண்ட ஊசி மருந்தே சிறுமி மரணத்துக்கு காரணம் என சிறுமிக்கு சிகிச்சை அளித்த ஒட்டன்சத்திரம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறுமி இறந்ததையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X