மலப்புரத்தில் படகு விபத்து-8 மாணவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
மலப்புரம்: கேரளத்தின் மலப்புரம் மாவட்டம், ஹரிகோடாவில் உள்ள சாளியாற்றில் படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலியானவர்கள் அனைவரும் 8 முதல் 15 வயது சிறுவர்கள். விபத்துக்குள்ளான படகில் மொத்தம் 40 பேர் இருந்துள்ளனர்.
ஹரிகோடாவிலிருமந்து சாளியாற்றின் வழியாக அருகில் உள்ள ஊருக்கு இவர்கள் சென்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சமீபத்தில் தான் தேக்கடியில் படகு விபத்து ஏற்பட்டு 45 பேர் பலியானார்கள். அந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு விபத்து நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications