For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகின்றனர்.

கடந்த ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து மும்பையில் தாக்குதல் நடத்தினர். இப்போது அதே பாணியில் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் திட்டியுள்ளனர். இத்தகவலை ராணுவ தளபதி தீபக் கபூர் டெல்லியில் தெரிவி்த்தார்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் வேம்பர், தருவைகுளம், வெள்ளப்பட்டி, திரேஸ்புரம், இனிகோநகர், பழையகாயல், புன்னக்காயல், திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினம் ஆகிய கடற்கரை பகுதியில் கடலோர காவல் படையினர் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X