பிரதமர் பாதுகாப்பு கெடுபி-பலியானவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமரின் பாதுகாப்பு கெடுபிடியால், பலியான நோயாளியின் மனைவிக்கு ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது.
சண்டிகரில் உள்ள மருத்துவக் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நேற்று வந்தார். அப்போது, அதே மருத்துவமனைக்கு வர்மா என்பவர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் அழைத்து வரப்பட்டார். பாதுகாப்பு கெடுபிடி காரணமாக, வர்மாவுக்கு தாமதமாகவே சிகிச்சை கிடைத்தது. சிகிச்சை பலனின்றி வர்மா உயிரிழந்தார்.
வர்மாவின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து இப்பிரச்னை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மன்மோகன் சிங் வருத்தம் தெரிவித்ததோடு, அதிகாரிகளையும் கண்டித்தார்.
இதைத்தொடர்ந்து, வர்மா குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக ரூ.2 லட்சம் வழங்கப்படுவதாக பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications