அசோக சக்கரத்தை எடுத்து விட்டு ராகுல்- ப.சி படம்!
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் ஆர்வக் கோளாறில் தேசியச் சின்னமான அசோக சக்கரத்தை எடுத்து விட்டு அதற்குப் பதில் ராகுல் காந்தியையும், கார்த்தியின் அப்பா ப.சிதம்பரத்தையும் போட்டு அமர்க்களப்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன்பு மதுரையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தின்போது, கூட்டம் கூட்டுவதற்காக நடனப் பெண்களை அழைத்து வந்து குத்தாட்டம் போட வைத்து கலக்கினர் கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள். இதனால் பெரும் முனுமுனுப்பு எழுந்தது. காங்கிரஸ் மேலிடமும் இதை ரசிக்கவில்லை.
இந்த அட்டகாசம் நடந்து ஒரு வாரம் கூட ஆகியிராத நிலையில் அடுத்து ஒரு அட்டகாசத்தை அரங்கேற்றியுள்ளனர் கார்த்தி சிதம்பரம் அன் கோவினர்.
இந்திரா காந்தியின் 25வது நினைவு நாளையொட்டி நடந்த நிகழ்ச்சிகளில் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். சிவகங்கை மாவட்டத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்காக மாவட்டம் முழுவதும் ஏகப்பட்ட பிளக்ஸ் போர்டுகளையும், போஸ்டர்களையும் போட்டுக் கலக்கியிருந்தனர் கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள்.
அதில், இந்தியாவின் தேசியச் சின்னமான அசோக சக்கரத்திற்குப் பதில் ப.சிதம்பரத்தையும், ராகுல் காந்தியையும் போட்டு வைத்திருந்தனர். இந்த பைத்தியக்காரத்தனத்தைப் பார்த்து மக்கள் தலையில் அடித்துக் கொண்டனர்.
காங்கிரஸ்காரர்களின் இந்த செயலை பெரும் பிரச்சினையாக்க தற்போது பாஜகவினர் கிளம்பியுள்ளனராம்.
-
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
அமித் ஷா பற்றி அந்த ஒரு சொல்! சுல்தான்பூர் கோர்ட்டில் ராகுல் காந்தி இன்று ஆதாரங்களை தாக்கல் செய்வாரா -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications