நீதிபதி தினகரன் ஆக்கிரமித்த நிலத்தைக் கைப்பற்றுவோம் - சிபிஎம் விவசாயிகள்
சென்னை: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் ஆக்கிரமித்துள்ள நிலத்தை கைப்பற்றப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயப் பிரிவான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினர்கள், நவம்பர் 9ம் தேதி ஏற்கனவே திட்டமிட்டபடி தினகரன் ஆக்கிரமித்த நிலத்தை கைப்பற்றும் போராட்டத்தை நடத்துவார்கள்.
காவேரிராஜபுரத்தில் நீதிபதி தினகரனால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரியிருந்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே எங்களது போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். நிலத்தைக் கைப்பற்றி நிலமில்லாத ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் அதை வழங்குவோம் என்றார்.












Click it and Unblock the Notifications