புழல்: பீடி-சிகரெட் கேட்டு கைதிகள் நிர்வாண போராட்டம்
சென்னை: சென்னை: சென்னை புழல் சிறையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளுக்கு பின்னர், அங்குள்ள கைதிகளுக்கு, வழங்கப்பட்டு வந்த பீடி, சிகரெட்டுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டன.
இந் நிலையில் நேற்று காலையில் பீடி, சிகரெட் கேட்டு, தண்டனை கைதி புருஷோத்தமன் உட்பட 6 கைதிகள் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப் போராட்டம் நடத்தினர். கைதி புருஷோத்தமன் திடீரென்று பிளேடால் உடலை கீறி காயப்படுத்தி, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதேபோல், பிளாக் 2, 3, 4ல் உள்ள 1000 கைதிகளும் உணவை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். போராட்டம் கடுமையானதை உணர்ந்த சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், கூடுதல் சூப்பிரண்டு கருப்பையா ஆகியோர் கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வருகிற பொங்கல் தினத்தன்று உறவினர்களுடன் பேசுவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்வதாகவும், பீடி, சிகரெட் அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்வோம் என்றும் வாக்குறுதி அளித்து கைதிகளை சமாதானப்படுத்தினர். மாலை 4 மணிக்கு மேல் கைதிகள் அனைவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டு சாப்பிட சென்றனர்.












Click it and Unblock the Notifications