For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலை விபத்தில் ஸ்ரீரங்கம் ஜீயர் சுவாமிகள் காயம்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: திண்டிவனம் அருகே இன்று காலை நடந்த கார் விபத்தில் ஸ்ரீரங்கம் ஜீயர் சுவாமிகளுக்கு காயம் ஏற்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த நாராயணன் ஜீயர் சுவாமிகள், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் ராமானுஜம் (60) என்பவரும் பயணம் செய்தார். குயிலன் (40) என்பவர் காரை ஓட்டிச் சென்றார்.

திண்டிவனத்தை அடுத்த மயிலம் கூட்டேரிப்பட்டு அருகே சென்றபோது ஜீயர் சுவாமிகளின் கார் விபத்துக்குள்ளானது. காரில் இருந்த 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மூவரும் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X