இலங்கை அகதிகளுக்கு இப்போதாவது விடிவு காலம் பிறந்தால் மகிழ்ச்சியே - விஜயகாந்த்
சென்னை: இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இப்போதாவது விடிவுகாலம் பிறந்தால் மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழ் அகதிகள் இடர் களைந்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்று முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதே இலங்கை தமிழ் அகதிகளின் முகாம்களுக்கு நான் நேரில் சென்று பார்த்தபோது அவர்கள் தெரிவித்த குறைபாடுகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.
மேலும் 12.2.2009 அன்று இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களுக்கு சென்று இலவச அரிசி, வேட்டி, சேலை போன்ற அவர்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களை தங்களால் இயன்றளவுக்கு வழங்கவேண்டுமென்று தே.மு.தி.க தோழர்களைக் கேட்டுக்கொண்டேன்.
தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழ் அகதிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக முகாம்களில் அடைபட்டுள்ளனர். தங்கள் குறைகளை நேரில் தெரிவிக்க தாசில்தாரைக்கூட அணுக முடியாமல் தவித்த அகதிகள், இன்று தி.மு.க. அமைச்சர்களையே அதிகாரிகளின் பரிவாரங்களோடு சந்திக்கின்றனர். ஏதோ இப்பொழுதாவது இந்த அகதிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததே என்பதில் நம்மைப் போன்றவர்கள் திருப்தியடையலாம்.
ஆனாலும் இந்த முகாம்களில் அடிப்படை வசதிகளுக்கு இந்த அரசு செலவழிக்கப்போவதாக அறிவித்துள்ளது வெறும் ரூ.12 கோடி தான். இது மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரப் போவதில்லை.
அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதியும், உயர்தரக் கல்வியும், வருமானம் தரத்தக்க வேலைவாய்ப்பும், அவர்களும் மற்றவர்களைப் போல் தொழில் செய்ய வசதியும் ஏற்படுத்தி தருவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தியாவிற்கு வந்த திபெத்திய அகதிகள் எல்லா வசதிகளையும் பெற்று நன்றாகப் படித்து, உத்தியோகங்களிலும், வணிகம் மற்றும் தொழில் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.
இலங்கையில் நடைபெற்ற தமிழினப்படுகொலையை தடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் இன்றும் அவர்களின் நெஞ்சை நெக்குருகச் செய்கிறது. இந்த சூழ்நிலையில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இப்பொழுதாவது விடிவு காலம் பிறக்கும் என்றால் நமக்கு மகிழ்ச்சி தான் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications