For Quick Alerts
For Daily Alerts
Just In
பஞ்சாபில் ரயில்களை மறித்து சீக்கியர்கள் போராட்டம்
லூதியானா: 1984ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிராக மத்திய அரசு செயல்படாமல் இருப்பதைக் கண்டித்து லூதியானாவில் சீக்கியர்கள் இன்று ரயில்களை மறித்து போராட்டத்தில் குதித்தனர்.
200க்கும் மேற்பட்ட சீக்கியர்கள், லூதியானா - டெல்லி இடையிலான ரயில் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தங்கா பீரத் சங்கம் என்ற சீக்கிய அமைப்பி்ன் தலைவர் சுர்ஜித் சிங் தலைமையில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதன் காரணமாக இன்று காலை 7 மணிக்கு லூதியானாவை விட்டு டெல்லிக்குக் கிளம்ப வேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்ப முடியவில்லை. இதையடுத்து தூரி மார்க்கம் வழியாக அந்த ரயில் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றது.
Comments
condemn கண்டனம் மத்திய அரசு centre Punjab போராட்டம் agitation பஞ்சாப் rail roko ரயில் மறியல் சீக்கியர்கள் sikhs
Story first published: Friday, November 6, 2009, 12:53 [IST]