ராஜபக்சேவின் சகோதரி திருச்செந்தூரில் யாகம் நடத்தினார்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரி நிருபமா ராஜபக்சே மற்றும் அவரின் கணவர் திருக்குமரன் நடேசன் ஆகியோர் திருச்செந்தூரில் நடந்த யாகத்தில் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இருவரும், நேற்று மதியம் திருச்செந்தூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்தனர். பின்னர் திருச்செந்தூர் கீழரத வீதியில் கோட்டாறு செட்டிமடத்தில் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு யாகத்தில் கலந்துகொண்டனர்.
இந்த யாகம் இன்று மதியம் வரை நடக்கிறது. இதில் கலந்து கொண்ட பின்னர் அவர்கள் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கின்றனர். அங்கிருந்து கொழும்பு செல்வார்கள் எனத் தெரிகிறது.
ராஜபக்சேவின் தங்கை மற்றும் கணவர் வருகையைத் தொடர்ந்து அவர்கள் தங்கியுள்ள ஹோட்டல், யாகம் நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications