கோவையிலும் அன்ரிசர்வ் ரயில் டிக்கெட் தனியார் மூலம் வினியோகம்
கோவை: முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகள் வினியோகிக்கும், சென்னையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் கோவையிலும் செயல்படுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜெயந்த் கூறினார்.
கோவை ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவையில் இருந்து இருகூர் வரை அமைக்கப்பட்டிருக்கும் இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து விட்டது. சோதனைப் பணிகளை நிறைவு செய்து, வெள்ளோட்டம் விடப்படும். அதன் பின்பு, ரயில்கள் இயக்கப்படும்.
முன்பதிவு அல்லாத டிக்கெட் வாங்குபவர்களின் (அன்ரிசர்வ்ட்) எண்ணிக்கை அதிரித்து வருகிறது. இந்த டிக்கெட்டுகளை வினியோகிக்கும் பணி, சென்னையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில், டிக்கெட் கட்டணத்தில் ஒரு ரூபாய் அதிகமாக இருக்கும். அத் திட்டம் கோவையில் விரைவில் அமலுக்கு வரும்.
இரு சக்கர பார்க்கிங் குத்தகைக்கு எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள், அதிக கட்டணம் வசூலித்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.
கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பதற்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. ரயில் பெட்டிகள் இணைப்பதற்கு பதிலாக கூடுதலாக ஒரு ரயில் இயக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications