சென்னை ஹைகோர்ட்-14 நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 14 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 60 இடங்களில் 54 இடங்களில் நீதிபதிகள் உள்ளனர். இதில் 26 பேர் நிரந்தர நீதிபதிகள் ஆவார்கள்.
கூடுதல் நீதிபதிகளாக இருந்த கே.சந்துரு, வி.ராமசுப்பிரமணியம், எஸ்.மணிக்குமார், ஏ.செல்வம், பி.ஆர்.சிவக்குமார், ஜி.ராஜசூர்யா, டி.சுதந்திரம், எஸ்.நாகமுத்து, எஸ்.பழனிவேல், கே.கே.சசிதரன், எம்.வேணுகோபால், வி.பெரியகருப்பையா, ஆர். சுப்பையா, எம்.சத்யநாராயணன் ஆகிய 14 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த வாரம் உத்தரவிட்டார்.
இவர்கள் நிரந்தர நீதிபதிகளாக இன்று காலை பதவியேற்றுக் கொண்டனர். தலைமை நீதிபதி கோகலே, அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதன்மூலம் உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இன்று பதவியேற்ற நீதிபதி கே.சந்துரு தனது சொத்து விவரத்தை உடனடியாக தலைமை நீதிபதியிடம் சமர்பித்தார். மற்ற நீதிபதிகளும் அடுத்த வாரத்தில் சொத்து விவரத்தை வெளியிடவுள்ளனர்.












Click it and Unblock the Notifications