'தினகரன் நிலம்'-மார்க். கம்யூ. கட்சியினர் கைது
சென்னை: நீதிபதி பி.டி. தினகரன் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் நிலத்தை மீட்க இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் விவசாய அணியின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நீதிபதி பி.டி. தினகரன் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் நிலத்தை மீட்க இன்று கம்யூனிஸ்ட் கட்சிகளும், அதன் விவசாயப் பிரிவினரும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தன.
இந்தப் போராட்டம் தேவையற்ற வன்முறைக்கு வழி வகுக்கும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்திருந்தார்.
இந் நிலையில் அந்தக் கட்சியினர் நேற்று மாலையே கைது செய்யப்பட்டுவிட்டனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன்
வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக நீதிபதி பி.டி.தினகரனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களை மீட்டு தலித் மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கிட வற்புறுத்தி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான கே.வரதராஜன் தலைமையில் போராட்டம் நடைபெறவிருந்தது.
நேற்று மாலை 5 மணி அளவில் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதென மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அழைப்பின் பேரில் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பி.சண்முகம், கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கே.செல்வராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராசன், மாவட்ட தலைவர்கள் துளசிநாராயணன், கே.ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து 3, 4 மாவட்ட போலீசாரை குவித்து, பொது மக்களையும் மிரட்டி வருகின்றனர். இத்தகைய அராஜகமான போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.
கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், 144 தடை உத்தரவை திரும்ப பெற்று குவிக்கப்பட்டுள்ள போலீசை திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளார் வரதராஜன்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications