ராஜபக்சே தங்கை வருகை: பரிகார பூஜை நடத்த வேண்டும்-இந்து மக்கள் கட்சி
Subscribe to Oneindia Tamil

ராஜபக்ஷேவின் தங்கை நிருபமா ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.
இந் நிலையில், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணிச் செயலாளர் சரவணன், ராமநாத சுவாமி கோயில் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இலங்கையில் ஆயிரக்கணக்கான இந்து தமிழர்கள் கொத்து கொத்தாக கொலை செய்ய்பட்டனர். இதற்குக் காரணமானவர் இலங்கை அதிபர் ராஜபக்கேஷ.
அவரது தங்கை நிருபமா ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்துள்ளார். அவர்கள் காலடி இந்த கோவிலுக்குள் பட்டதால் கோவிலுக்கு 'பிரம்மஹத்தி தோஷம்' ஏற்பட்டு கோயிலின் புனிதம் கெட்டுவிட்டது.
எனவே, கோயிலின் புனிதம் காக்க கோயிலில் பரிகார பூஜை நடத்த வேண்டும். இல்லையென்றால்
இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களே பரிகாரம் பூசையில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications