டெல்லி-வீடு தீப்பிடித்து 4 வாலிபர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: புதுடில்லியில் வீடு தீப்பிடித்து 4 வாலிபர்கள் உடல் கருகி பலியானார்கள்.
டெல்லி ராம்புரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை திடீரென தீ பிடித்தது. சில நிமிடங்களில் தீ வீடு முழுவதும் பரவியது.
தீயணைப்பு படையினர் தகவல் அறிந்ததும் 2 வண்டிகளில் வந்து தீயை அணைத்தனர். அதன் பிறகு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 4 வாலிபர்கள் உடல் கருகி பலியாகி இருப்பது தெரிந்தது.
அவர்கள் அந்த வீட்டில் வசித்து வந்த ஜமீர், முகம்மது கிஜாஸ், நஜீம், சபாகரீம் என அடையாளம் காணப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications