தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை-2 நாட்களில் அதிகரிக்கலாம்

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கை...
தமிழகத்தின் உட் பகுதிகளில் இன்று சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. கடலோரத் தமிழத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் இன்று அதிக அளவாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, திருப்புவனம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பெய்தது.
ராயக்கோட்டை, சத்யமங்கலம், சிட்டம்பட்டி, திருச்சுழி தலா 3 செமீ மழையும், ஆரணி, துரையூர், மதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகரில் தலா 2 செமீ மழையும் பெய்தன.
அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை தமிழகத்தின் வெகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இருக்கலாம்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களைப் பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 2 நாட்களில் மழையின் அளவில் ஓரளவு அதிகரிப்பு காணப்படலாம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications