அனுஷ்கா ஆபாச பட வழக்கு-வாரண்ட் பிறப்பிப்பு

Subscribe to Oneindia Tamil

Anoushka
டெல்லி: சிதார் மேதை பண்டிட் ரவிசங்கரின் மகள் அனுஷ்காவின் கம்ப்யூட்டரில் இருந்த அவரது ஆபாசப் படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டிய நபருக்கு எதிராக டெல்லி கோர்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் ஜூனைத் கான். தொழிலதிபர். இவரிடம் தனது லேப்டாப் கம்ப்யூட்டரை பழுது பார்க்கக் கொடுத்திருந்தார் அனுஷ்கா. அப்போது லேப்டாப்பின் ஹார்ட் டிஸ்க்கில் இருந்த அனுஷ்காவின் அரைகுறை உடை ஆபாசப் படங்களைப் பார்த்தார் ஜூனைத் கான்.

இதையடுத்து இவற்றை வெளியிடப் போவதாக மிரட்டி பணம் கேட்டுள்ளார் அனுஷ்காவிடம். இதையடுத்து டெல்லி போலீஸில் புகார் கொடுத்தார் அனுஷ்கா. இதைத் தொடர்ந்து ஜூனைத் கான் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீது டெல்லி தலைமை பெருநகர கோர்ட்டில் போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். நவம்பர் 11ம் தேதி இந்த வழக்கில் டெல்லி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். மேலும், அவரை ஐபிசி சட்டப் பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் விசாரிக்கவும் கோர்ட்டில் அனுமதி கோயிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, வருகிற 27ம் தேதியன்று ஜூனைத்கான் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கூறி வாரண்ட் பிறப்பித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+